“வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால் தீர்வு காண முடியாது” : ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து

டெல்லி : வேலைவாய்ப்பு திண்டாட்டத்தை ஒன்றிய அரசால் சரிசெய்ய முடியாது என ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து சமூக, பொருளாதார பிரச்னைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறானது என்று கூறிய அவர், தனியார் நிறுவனங்கள்தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும் என்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றும் அனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

The post “வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால் தீர்வு காண முடியாது” : ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: