ஓசூர் அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகள் 200 கிலோ குட்கா பறிமுதல்

*3 வாலிபர்கள் கைது

ஓசூர் : ஓசூர் அருகே வாகன தணிக்கையின் போது 200 கிலோ குட்கா, 288 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வடமாநில வாலிபர்கள் உள்பட 3பேரை கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 55 மூட்டைகளில் 200 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுமன் சிங் (24), மொகிம் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மத்திகிரி போலீசார் பூனப்பள்ளி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடகாவில் இருந்து 180 மில்லி கொண்ட 288 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மது கடத்தி வந்த ஓசூர் அருகே கப்பக்கல்லையை சேர்ந்த மாது (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த மது பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

The post ஓசூர் அருகே கர்நாடக மதுபாக்கெட்டுகள் 200 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: