அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது

ஆண்டிமடம்,மார்ச்23: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (29) பெயிண்டர். இவரது தாய் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தங்கத் தாலி மற்றும் குண்டுகளை சேர்த்து 5 கிராம் மதிப்புள்ள தாலியை போட்டோவிற்குள் வைத்து பிரேம் செய்து தினமும் அதற்கு பூஜை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித் குமார் பெயிண்டிங் வேலை செய்ய வெளியூர் சென்று விட்டதால் அவரது மனைவி ஆர்த்தி மட்டும் வீட்டில் இருந்தார்.

ஆர்த்தி வீட்டின் வெளியே சென்ற நேரத்தில் அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்த இளையராஜா (37) என்பவர் வீட்டிற்குள் புகுந்து போட்டோவில் இருந்த தங்கத்தாலியை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து ரஞ்சித் குமார் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து இளையராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர்(தனி) சட்ட மன்றத்தொகுதிக்கு 398 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 398 கட் டுப்பாட்டு கருவிகளும், 431 விவிபேட் கருவிகளும்என 1,227 கருவிகளும், 148 குன்னம் சட்டமன்றதொகுதிக்கு 384 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 384 கட் டுப்பாட்டு கருவிகளும், 416 விவிபேட் கருவிகளும் என 11,847கருவிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றது.

The post அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: