அமைச்சர், எம்.பி. கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து

முன்னதாக வேட்பு மனுத் தாக்கலுக்காக திருச்சியில் இருந்து பெரம்பலூர் வந்த திமுக வேட்பாளர் அருண் நேரு, பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. இராசா, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோரிடம் வாழ்த்து பெற் றார். அப்போது திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்ச ருமான கே.என்.நேரு உடனிருந்தார்.

மேலும் வேட்பாளர் அருண் நேருவுக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சய கோபால், இராஜேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் பெரம்பலூர் ஜெகதீசன், திருச்சி (மத்திய) வைர மணி, திருச்சி (வடக்கு) காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் பெரம்பலூர் பிரபாகரன், மன்னச்சநல்லூர் கதிரவன், மாணிக்கம், சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப் பாளர் ஜான்அசோக் வரதராஜன், மாவட்டத் தலைவர் சுரேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விசிக மாவட்டச் செயலாளர் ரத்தினவேல், கம்யூ கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் ரமேஷ், ஜெயராமன், இ.யூ.மு.லீக் மாவட்ட தலைவர் சர்புதீன், ஈஸ்வரன், நெடுஞ்செழியன் மற்றும் பெரம்பலூர், லால்குடி, துறையூர், மண்ணச்ச நல் லூர், முசிறி, குளித்தலை ஒன்றிய திமுக செயலாளர்கள், மாநில, மாவட்ட, நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள் வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post அமைச்சர், எம்.பி. கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: