பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது

 

மேட்டுப்பாளையம், மார்ச் 23: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலைக்கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, காரமடை பிடிஓ அலுவலகம் அருகே நிதின் சுரேஷ் என்பவரின் காரை மறித்து சோதனையிட்டபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.57,500 இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நிஷாத் என்பவரின் காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.60 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதனையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சுத்து 17 ஆயிரத்து 500 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர்.

The post பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: