அன்னமங்கலம் கைகாட்டி அருகே வாகன தணிக்கையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

 

பெரம்பலூர், மார்ச் 22: அன்னமங்கலம் கைகாட்டி அருகே நிலையான கண்காணிப்புக்குழு நடத்திய வாகனத் தணிக்கையில் ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், 147 பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதிகு உட்பட்ட வேப்பந்தட்டை தாலுக்கா, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் அன்னமங்க லம் கைகாட்டி அருகே நேற்று(21ஆம்தேதி) மதியம் 1.23 மணியளவில் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரால் வேப்பந்தட்டை யிலிருந்து- பெரம்பலூர் வரை செல்லவிருந்த TN 55 BA 0029 (BOLERO) என்ற பதிவெண் கொண்ட வாக னத்தில் ரூ1லட்சம் ரொக்க பணம் உரியஆவணமின்றி எடுத்து செல்லபட்டபோது, பிரேமஜெயம் தலைமையி லான நிலையான கண்கா ணிப்புக்குழு நடத்திய வாக னத் தணிக்கையில் கைப் பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டத் தொகை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான உதவி தேர் தல் நடத்தும் அலுவலரான சப்.கலெக்டர் கோகுல் என் பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post அன்னமங்கலம் கைகாட்டி அருகே வாகன தணிக்கையில் ரூ.1 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: