குன்னம் தாலுகாவில் வெவ்வேறு இடங்களில் ரூ.3.40 லட்சம் ரொக்கம் பறிமுதல்

 

குன்னம், மார்ச் 22: குன்னம் தாலுகாவில் நேற்று மாலை 4 மணி அளவில் மருதையான் கோவில் – துங்கபுரம் செல்லும் சாலையில் மருதையான் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் காடுர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்துவேல் (53) என்பவரிடமிருந்து ரூ.1,40,000 (ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்) உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டதை குன்னம் டிஎஸ்ஓ இளவரசு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆரோக்கியராஜ், சத்யா, செல்வகுமார் ஆகியோர் அடங்கிய குழுவால் கைப்பற்றப்பட்டது.

நேற்று நல்லறிக்கை அருகே மாலை 6.30 மணி அளவில் வாகனம் வாகன தணிக்கை செய்யும்போது ராதாகிருஷ்ணன் மகன் விஸ்வநாதன் ( 32 ) ஆம்னி காரிலிருந்து ரூ.2 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதை வட்டாட்சியர் பாக்கியராஜ், உதவி ஆய்வாளர் சூரிய கலா மற்றும் முதல்நிலைக் காவலர் ஆதி, இரண்டாம் நிலை காவலர் ஜமாலுதீன் வாகன ஓட்டுனர் சத்தியமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவால் கைப்பற்றப்பட்டது.

The post குன்னம் தாலுகாவில் வெவ்வேறு இடங்களில் ரூ.3.40 லட்சம் ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: