பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்

 

பெரம்பலூர், மார்ச் 21: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிகான தேர்தல் செலவினப் பார்வையாள ராக வி.ஆர்.ஹரி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செலவினப் புகார் களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டரு மான கற்பகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக் கான தேர்தல் செலவினப் பார்வையாளராக வி.ஆர். ஹரி என்பவரை நியமித்து இந்தியத் தேர் தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் செலவி னப் பார்வையாளர் பெரம் பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகம் மேற்கே உள்ள அரசு சுற்றுலா மாளிகை யில் தேர்தல் முடியும் வரை தங்கியிருப்பார். தேர்தல் செலவினங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க விரும்புவோர், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக் கான தேர்தல் செலவின பார்வையாளரை 93639 71545 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரி விக்கலாம் எனமாவட்ட தேர் தல் அலுவலரான, மாவட் டக் கலெக்டர் தெரிவித் துள்ளார்.

The post பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: