ரூ.30 லட்சத்தில் கர்ப்பிணியின் உதவியாளர்கள் தங்கும் அறை: எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டில் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகளுக்கு உதவியாக வரும் உதவியாளர்களுக்கு ஓய்வெடுக்கும் அறை மற்றும் காஞ்சிபுரம் பல்லவன் நகர், கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு பகுதி ஆகிய 2 இடங்களில் அங்கன்வாடி மையம், ஒலிமுகமதுபேட்டை பகுதியில் ரேஷன் கடை என மொத்தம் ரூ.79.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தலைமை தாங்கி, அனைத்து கட்டுமான பணிகளை அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர் கணேஷ், மண்டல தலைவர் செவிலிமேடு மோகன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கவுதமி திருமாதாசன், பானுப்பிரியா சிலம்பரசன், சுப்பராயன், அஸ்மா பேகம், பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், மாநகர துணை செயலாளர் முத்துசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ரூ.30 லட்சத்தில் கர்ப்பிணியின் உதவியாளர்கள் தங்கும் அறை: எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: