சுதந்திர போராட்ட தியாகி மரணம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழியை சேர்ந்தவர் நாகூர்கனி(99). இவர், நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏயில் சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் குடியேறினார். வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள், தியாகி நாகூர்கனி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நேற்று பெருநாழி முஸ்லிம் மையவாடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post சுதந்திர போராட்ட தியாகி மரணம் appeared first on Dinakaran.

Related Stories: