மதுரை: மதுரையில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கின. மதுரை தெப்பக்குளம், காமராஜர் சாலை பகுதி முழுவதும் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது. சாலைகள் மழை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.