ஆம்புலன்சை கடத்திச் சென்ற போதை வாலிபர்


சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த உத்திரகிடிகாவல் ஊராட்சி தாண்டாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். போலீஸ் ஸ்டேஷன் அருகே, பேளுக்குறிச்சி பிரிவு பகுதியில்நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், ஆம்புலன்ஸ்சை நிறுத்தி விட்டு, அருகில் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தியிருந்த ஆம்புலன்ஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீசார் தேடி வந்த நிலையில், சிங்களாந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்த ஆம்புலன்சை பிடித்து அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில், பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் கோபி (40) என்பதும், குடிபோதையில் ஆம்புலன்சில் சாவி இருந்ததை பார்த்து ஓட்டி சென்றது தெரிந்தது. இதையடுத்து போதையில் இருந்த கோபியை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

The post ஆம்புலன்சை கடத்திச் சென்ற போதை வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: