கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் விழா வருகிற 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ,பாரம்பரிய விளையாட்டுகள், படகு அலங்கார அணி வகுப்பு ,மீன்பிடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது மே, ஜூன் மாதங்களுக்கு சுற்றுலா வர 54, 112 வாகனங்கள் பதிவு செய்துள்ளன; மே 7 முதல் இன்று வரை 9,555 வாகனங்கள் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 1,500 வாகனங்கள், 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.