நானா போகல. அதிமுகவா கூப்பிட்டாங்க: மன்சூர் அலிகான் பங்கம்

அதிமுக கூட்டணியில் சேர தற்போது தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனாலும், இந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்று இன்னும் முடிவாகவில்லை. இந்தநிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர்அலிகான் நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அங்கு, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோருடன் மன்சூர்அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மன்சூர்அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், கூட்டணியில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக அழைப்பின் பேரிலேயே பேச்சுவார்த்தைக்கு சென்றேன். ஒரு தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவேன். மற்றொரு பெரிய கட்சியில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது’’ என்றார். இதைதொடர்ந்து மன்சூர்அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது’ என்று கூறியுள்ளார்.

The post நானா போகல. அதிமுகவா கூப்பிட்டாங்க: மன்சூர் அலிகான் பங்கம் appeared first on Dinakaran.

Related Stories: