சோதனையின்போது ஹான்ஸ், மாவா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த பச்சையம்மாள் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ ஹான்ஸ், 2 கிலோ மாவா, 30 கிலோ ஜர்தா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் கொடுத்த தகவலின்பேரில், கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த ராயபுரம் பாஜக கிழக்கு மண்டல பொருளாளர் ராஜேந்திரன், லோகேஷ் (29), நரேந்தர் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பச்சையம்மாளுக்கு உடந்தையாக இவர்கள் 3 பேரும் மாவா, ஹான்ஸ், போதைபாக்கு ஆகியவற்றை வாங்கி கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட பச்சையம்மாள் உட்பட 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது கூட்டாளிகளான தலைமறைவான முனியம்மாள் என்ற தேவி (46), சத்யா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதில், லோகேஷ், நரேந்தர் ஆகியோர் முனியம்மாளின் மகன்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post மாவா, ஹான்ஸ் பதுக்கி விற்பனை: பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.