மாநகர காவல்துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகம் திறப்பு

 

கோவை, மார்ச் 8: கோவை மாநகர காவல்துறை சார்பில், சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது. இது, தற்போது, அதே வளாகத்தில், காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தரை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர், குத்துவிளக்கு ஏற்றி, அலுவலக பணிகளை துவக்கி வைத்தார். விழாவுக்கு வருகை புரிந்த போலீஸ் கமிஷனருக்கு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில், துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர்கள் மகேஸ்வரன், ஆனந்த், சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, காளீஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post மாநகர காவல்துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.