இதுபற்றி நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: வேலையின்மை காரணமாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் யாருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்?. இன்று மோடி குடும்பம் என்கிறார்கள்.
அப்படியானால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொந்தவு பிரச்னையில் சிக்கிய பிரிஜ் பூஷன் சரண் சிங், மேற்குவங்கத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பவன் சிங், வங்கி பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோரும் மோடி குடும்பத்தை சேர்ந்தவர்களா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
The post மல்லையா, நிரவ் மோடி, பிரிஜ் பூஷன் ஆகியோர் மோடி குடும்பத்தில் உள்ளனரா?.. காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.