தவிர, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி தொகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திரிணாமுல் கட்சியை பாஜக விமர்சித்து வரும் நிலையில், பவன் சிங்கை வேட்பாளராக நிறுத்துவதை பாஜக தலைமையும் விரும்பவில்லை. இதையடுத்து, போட்டியில் இருந்து விலகுமாறு பவன் சிங்கை பாஜக அறிவுறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து பவன் சிங் வெளியிட்டபதிவில், ‘என் மீது நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த பாஜக தலைமைக்கு நன்றி. சில காரணங்களால், அசான்சோல் தொகுதியில் என்னால் போட்டியிட முடியாது’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங்கை, அசான்சோல் தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவரும் போட்டியிட மறுக்கும்பட்சத்தில் மற்றொரு பாஜக மூத்த தலைவர் ஜிதேந்திர திவாரியை களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அசான்சோல் தொகுதிக்கு ஆள்பிடிக்கும் வேலையில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.
The post அசான்சோல் தொகுதிக்கு வந்த சோதனை பாடகர் பின்வாங்கியதால் நடிகையை களமிறக்கும் பாஜக?: மேற்குவங்கத்தில் வேட்பாளர் கிடைக்காமல் தடுமாற்றம் appeared first on Dinakaran.