வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி தலைமையில் நடந்தது திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில்

திருவண்ணாமலை, பிப்.29: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை எஸ்பி கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், புதன் கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதில், டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, சொத்து பிரச்னை, குடும்ப தகராறு, கடன் பிரச்னை உள்ளிட்ட புகார்கள் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி 27 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது தொடர் விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு, சம்பந்தப்பட்ட சப் டிவிஷன் டிஎஸ்பிக்களுக்கு மனுக்களை பரிந்து செய்து எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரைத்தார். இந்நிலையில், ஆரணி பகுதியைச் சேர்ந்த ஒருவர், நிலத்தை ஆக்கிரமித்து தகராறு செய்வதாகவும் இது தொடர்பாக அளித்த புகார் மீது ஆரணி தாலுகா போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார். மேலும், கடன் தகராறு, சொத்து பிரச்னை போன்ற மனுக்கள் மீது, கோர்ட் மூலம் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார்.

The post வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி தலைமையில் நடந்தது திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: