கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி நண்பர்கள் கண் முன் பரிதாபம் செய்யாறு அருகே திருவிழாவிற்கு வந்த

செய்யாறு, ஜூலை 24: செய்யாறு அருகே ஆடி மாத திருவிழாவிற்கு நண்பர்களுடன் வந்த கல்லூரி மாணவர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் தாலுகா, செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், கூலித்தொழிலாளி. இவரது மகன் திருவளவன்(19), தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் இருந்து மாணவர்களுடன் முகாம் செல்வதாக நேற்று முன்தினம் பெற்றோரிடம் கூறிவிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பாராசூர் கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் ஆடித்திருவிழாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், நேற்று காலை திருவளவன் அவரது நண்பர்கள் 6 பேருடன், பாராசூர் கிராமத்தில் கமலக்கண்ணன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது, திடீரென கிணற்றில் தவறி விழுந்த திருவளவன் நீச்சல் தெரியாததால் நண்பர்கள் கண் முன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செய்யாறு தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் திருவளவன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து இறந்த மாணவனின் தந்தை சரவணன் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி நண்பர்கள் கண் முன் பரிதாபம் செய்யாறு அருகே திருவிழாவிற்கு வந்த appeared first on Dinakaran.

Related Stories: