இந்த விபத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த சிவகாசி அருகே அருணாசலபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; வாலிபர் பலி appeared first on Dinakaran.