அமைச்சர் சாமிநாதன் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர் சா.பெருமாள் சாமி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான சாமிநாதனின் தந்தை முத்தூர் சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் சாமிநாதனை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளை கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததை குறிப்பிட்டார். மறைந்த பெருமாள்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அமைச்சர் சாமிநாதன் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: