மொத்த திட்ட ஒதுக்கீடான ரூ.1179.72 கோடியில், ரூ.885.49 கோடியை உள்துறை அமைச்சகம் தனது சொந்த நிதியிலிருந்தும், ரூ.294.23 கோடியை நிர்பயா நிதியிலிருந்தும் வழங்கும் என அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்,‘‘ பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை அறிவியல் பூர்வமாகவும்,சரியான நேரத்தில் விசாரிக்கவும் புனே, சண்டிகர், கொல்கத்தா, டெல்லி, காம்ரூப் மற்றும் போபால் ஆகிய இடங்களில் 6 சைபர் தடய அறிவியல் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்’’ என்றார்.
The post ரூ.1179 கோடியில் 2026 வரை பெண்கள் பாதுகாப்பு திட்டம் appeared first on Dinakaran.