பெங்களூர்: பெங்களூருவில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள், உணவகங்கள் செயல்பட கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டல் சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அனுமதி வழங்கினார். பெங்களூரு நகரை உலக தரத்துக்கு உயர்த்தவும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.