டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கார்கள், பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன. காஜிப்பூரில் இருந்து டெல்லி செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.