காரின் மீது ஏறி நின்று பேட்டியளித்த மேற்கு வங்க பாஜ தலைவர் படுகாயம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு உள்ள மக்களை துன்புறுத்தியதாக கூறி பாஜ கட்சியினர் போராட்டம் நடத்தினர். சந்தேஷ்காலிக்கு செல்வதாக அறிவித்த மாநில பாஜ தலைவர் சுகந்தா மஜூம்தார் நேற்று முன்தினம் அங்கு சென்றார். அப்போது சுகந்தா மஜூம்தாரை போலீசார் தடுத்து நிறுத்தி ஓய்வு இல்லத்தில் தங்க வைத்தனர். நேற்று மீண்டும் அவர் சந்தேஷ்காலிக்கு செல்ல முயன்றார். அப்போதும் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காரின் மீது ஏறி நின்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திடீரென தவறி விழுந்தார். இதில் காயமடைந்த மஜூம்தாருக்கு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post காரின் மீது ஏறி நின்று பேட்டியளித்த மேற்கு வங்க பாஜ தலைவர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: