அலகாபாத்: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 3 மாதங்களில் மட்டும் வரதட்சணை மரணங்கள் தொடர்பான 510 வழக்குகளில் 508ல் (99.61%) கைதானவர்களுக்கு தனி நீதிபதி பங்கஜ் பாட்டியா ஜாமின் வழங்கியுள்ளார். திருமணமான சில மாதங்களில் புதுமணப்பெண் கொலையான வழக்கில், கைதானவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதன் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவை கடுமையாக விமர்சித்தது. இதனால், ஜாமின் வழக்குகளை தனக்கு ஒதுக்க வேண்டாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தனி நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
