விவசாயிகளின் குரலை ஒடுக்கும் சர்வாதிகார மோடி அரசு: காங்கிரஸ் கடும் விமர்சனம்

டெல்லி: விவசாயிகளின் குரலை ஒடுக்கும் சர்வாதிகார மோடி அரசு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; முள்வேலி, ட்ரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள்… எல்லாம் ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளின் குரலை ஒடுக்கும் சர்வாதிகார மோடி அரசு. அவர் விவசாயிகளை , “கிளர்ச்சியாளர்” என்றும் “ஒட்டுண்ணி” என்றும் சொல்லி அவதூறு செய்து 750 விவசாயிகளின் உயிரைப் பறித்தது நினைவிருக்கிறதா? 10 ஆண்டுகளில், நாட்டிற்கு உணவு அளிப்பவர்களுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளை மோடி அரசு மீறியுள்ளது.

விவசாயிகளின் வருமானம் 2022க்குள் இரட்டிப்பாகும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி, பயிரிடும் செலவு + 50% MSP செயல்படுத்தல். MSP க்கு சட்ட அங்கீகாரம். இப்போது 62 கோடி விவசாயிகளும் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் காங்கிரஸ் கட்சி “விவசாய நீதி” குரல் எழுப்பும். விவசாயிகள் இயக்கத்திற்கு நமது முழு ஆதரவு உண்டு. பயப்பட மாட்டோம்… தலைவணங்க மாட்டோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post விவசாயிகளின் குரலை ஒடுக்கும் சர்வாதிகார மோடி அரசு: காங்கிரஸ் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: