இவர் ஆர்.எஸ்.நகர், வில்சன் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல், போக்குவரத்து போலீசார் மீதோ தன் உயிர் மீதோ எந்த பயமும் இல்லாமல் செல்போனில் பேசியபடி பலமுறை சென்றுள்ளார். அதனால் அவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 300 வழக்குகள் உள்ளன. 300க்கும் அதிகமான முறை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய அவர் ரூ.3.20 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அதிகமான வழக்குகளுக்கு சொந்தக்காரர் இவரே. அந்த அபராத தொகையை வசூலிப்பதற்காக போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, என் பைக்கே வெறும் ரூ.20-25 ஆயிரம் தான். ஆனால் அபராதம் ரூ.3.20 லட்சமா? அதெல்லாம் செலுத்த முடியாது. வேண்டுமென்றால் பைக்கை தருகிறேன்; வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அபராதம் எல்லாம் செலுத்த முடியாது என்று போலீசாரிடம் கூறிவிட்டார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.20 ஆயிரம் மதிப்பு பைக்குக்கு ரூ.3.20 லட்சம் அபராதம்: பைக்கை வேண்டுமானால் தருகிறேன், அபராதம் செலுத்த முடியாது என கூறிய நபரால் பரபரப்பு appeared first on Dinakaran.