அடுத்த வாரத்தில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் அறிக்கை வெளியிடுவோம். எங்களுக்கு வேறு வழியில்லை. அதிமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. நாங்கள் இந்த தேர்தலில் எதிர்கட்சிகளை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவோம். கருத்து கணிப்புகளை வைத்து எடை போட முடியாது. தேர்தல் பணி, களப்பணி சரியாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், எங்கள் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுப்போம். பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆகட்டும். அவர் சாதியை ஒழிப்பாரா, இல்லையா என்று பின்னர் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக கூட்டணியில் நாங்கள் மட்டும்தான் உள்ளோம்: பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.