இதனை கவனித்த அந்த பகுதி மக்கள், சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சிவகாசி தீப்பெட்டி ஆலையில் தீ: ரூ.25 லட்சம் மதிப்பிலான பண்டல்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.