உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு

 

மேட்டுப்பாளையம், பிப்.3: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் \” உங்களைத்தேடி உங்கள் ஊரில்\” என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மேட்டுப்பாளையம் தாலுகா அளவில் பல்வேறு அரசு அலுவலகங்கள், வளர்ச்சித்திட்ட பணிகள் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் மனுக்களையும் பெற்று கொண்டார்.

தொடர்ந்து நேற்று காலை முதலே மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை, நடூர் பகுதியில் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் சிற்றுண்டி சமைக்கும் இடம் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்த அவர் அவர்களின் குறையை கேட்டறிந்தார். இதேபோல், மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியில் உள்ள வள்ளுவர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார். இந்நிகழ்ச்சிகளின் போது மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, துணை தலைவர் அருள் வடிவு முனுசாமி, கமிஷனர் அமுதா, கோட்டாட்சியர் கோவிந்தன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் கலெக்டர் அதிரடி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.