எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை, ஜூன் 20: கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி மேற்பார்வையில், எஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் முகாம் நடைபெற்றது. மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டது. இதில் குடும்ப பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறு விசாரணை நடைபெற்றது. இவற்றில் 4 மனு மீது எப்ஐஆர், 1 மனு மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது. 59 மனுக்களுக்கு சுமூகமான தீர்வும், 17 மனுக்களுக்கு மேல் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.

The post எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.