புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசி

கோவை, ஜூன் 19: கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. சுமார் 11 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. மாவட்ட அளவில், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரள மாநிலத்தை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பிற மாவட்ட தொழிலாளர்களும் அதிகமாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் ரேஷன் அட்டை வைத்துள்ளனர். சொந்த ஊர் முகவரியில், அந்த பகுதி கடையில் ரேஷன் கார்டு இருக்கிறது. இவர்கள் கோவையில் வேலை செய்யும் பகுதி, தங்குமிடம் அருகேயுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவர்களில் சிலருக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் பிற மாநிலத்தினருக்கு ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஆயிரம் வெளி மாநில ெதாழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரிசி வாங்கி வருவதாக தெரியவந்துள்ளது.

The post புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.