இதையடுத்து ரூ.2,500 கோடி முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் தொடர்புத்துறை தலைவர் லாரா பெர்ஜெனோ, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடி உட்பட பல பகுதியில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு உலக அளவில் முன்னணி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி முதலீடு: ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.