கும்பகோணம்: கும்பகோணம் அருகே கருப்பூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற 16 வயது சிறுவர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சிறுவர்களுக்கு தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டக் கொடுத்த அதன் உரிமையாளர் ராமச்சந்திரன் மீது பந்தலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.