இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மக்களவை பொதுத்தேர்தல் தேதி குறித்து இதுபோன்று பரவும் செய்திகள் போலியானது என்பதால் அதனை பொதுமக்கள் உட்பட யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் ஆணையத்தால் தற்போது வரையில் தேர்தல் தேதிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அனைத்து பணிகளும் முடிவடைந்து தேர்தல் தேதி குறித்து முறையாக செய்தியாளர்களுக்கு அழைப்பு கொடுத்து வெளிப்படையாக அனைத்து விவரங்களுடன் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மக்களவை தேர்தல் தேதி விவகாரத்தில் போலி செய்திகளை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.