2024 மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இனி தேர்தல் இருக்காது: கார்கே பேச்சு

புவனேஸ்வர்; வரும் தேர்தலில் மோடி வெற்றி பெற்றால், இனி தேர்தலே இருக்காது என்று காங்கிரஸ் தலைவர் கார்கே அச்சம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் விஷம் போன்றது. எனவே மக்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு இது கடைசி வாய்ப்பாகும். 2024 மக்களவை தேர்தலில் மோடி தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் தேர்தலே நடத்தப்படாது. நாட்டில் சர்வாதிகாரம் தான் இருக்கும். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியதால் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பீகார் மகாபந்தன் கூட்டணியில் இருந்து ஒருவர் விலகுவது எங்களை பலவீனப்படுத்தாது, பாஜவை நிச்சயம் தோற்கடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 2024 மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இனி தேர்தல் இருக்காது: கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: