தேனாம்பேட்டையில் குழாய் இணைப்பு பணி 3 மண்டலங்களில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை, ஜன.21: தேனாம்பேட்டையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 3 மண்டலங்களில் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும், என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் தேனாம்பேட்டை மண்டலம், வெங்கட்நாராயணா சாலை மற்றும் சேமியர்ஸ் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை மறுநாள் (23ம் தேதி) காலை 6 மணி முதல் 24ம் தேதி காலை 6 மணி வரை மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு) ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தேனாம்பேட்டையில் குழாய் இணைப்பு பணி 3 மண்டலங்களில் 23ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: