இதையடுத்து மும்பையை சேர்ந்த ,சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், அன்னபூரணி படத்தில் இந்து மத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பட தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கோ உள்ளிட்டோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post ‘அன்னபூரணி’ படத்துக்கு எதிராக புகார்: நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.