உழவர் பேரியக்க ஆலோசனை கூட்டம்

ராசிபுரம், ஜன.3: நாமக்கல் கிழக்கு மாவட்ட உழவர் பேரியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநில உழவர் பேரியக்கத்தின் மாநில துணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். மாநில சங்க செயலாளர் வடிவேலன், ஒன்றிய செயலாளர் சேகர், குணசேகரன், மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் முருகானந்தம், செயலாளர் செங்கோட்டுவேல், ஒன்றிய அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன், செந்தில், செல்வம், அய்யனார், அம்மையப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிகளில் மலை கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளது. பன்றிகள் மரவள்ளி கிழங்கு, மக்காச்சோளம், தக்காளி போன்ற பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும், அரசு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post உழவர் பேரியக்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: