இந்நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை பரந்தாமன், அவரது மனைவி மற்றும் 3 மகள்களை அழைத்துக்கொண்டு பைக்கில் ஆம்பூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். ஆம்பூர் அடுத்த மாராபட்டு தேசிய நெடுஞ்சாலையில் காலை 7.45 மணிக்கு சென்றபோது அங்குள்ள சாலை வளைவில் திரும்பினார். அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் பரந்தாமன் ஓட்டி சென்ற பைக் மோதி 5 பேரும் கீழே விழுந்தனர்.
இவர்களில் பேரரசி, கார்த்திகா இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் பரந்தாமன், அவரது மனைவி மற்றும் மகள் இளவரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியின் அடியில் சிக்கி இருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புத்தாண்டை கொண்டாட சென்றபோது விபத்து லாரி சக்கரத்தில் சிக்கி 2 சிறுமிகள் உடல் நசுங்கி பலி: தாய், தந்தை உட்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.