இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிலக பாதுகாப்புத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் உள்ள பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டி சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகரில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையை ஆய்வு செய்வதற்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள் கொண்ட குழு பட்டாசு ஆலைகளில் தினசரி அடிப்படையில் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஆராய்வு மேற்கொண்டு விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தொழிலக பாதுகாப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும்:தொழிலக பாதுகாப்புத்துறை தகவல் appeared first on Dinakaran.