தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும்: தொழிலக பாதுகாப்புத்துறை தகவல்

சென்னை: தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தொழிலக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு தொழிற்சாலைகளில் தீ விபத்து எதிரொலியாக ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள் கொண்ட குழு பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும்.

The post தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும்: தொழிலக பாதுகாப்புத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: