ஏஐ தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பயங்கரவாத அமைப்புகளை சென்றடைந்தால் உலகளாவிய பாதுகாப்பு ஒரு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த பிரச்னையை சரி செய்யவும், ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை நிறுத்தவும் உலக அளவில் ஒரு உறுதியான திட்டத்தை உருவாக்க வேண்டும்.
பல்வேறு சர்வதேச சிக்கல்களுக்கான ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை நாம் வைத்திருப்பது போல், ஏஐ பயன்பாட்டிற்கான உலகளாவிய நெறிமுறை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இதில் அதிக ஆபத்துள்ள ஏஐ கருவிகளை சோதனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒரு நெறிமுறை உருவாக்க வேண்டும். ஏனெனில் செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் இந்தியாவின் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்திய அரசு விரைவில் ஏஐ வழியான தொழில்நுட்ப பணியைத் தொடங்கும். சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மாற்றும் ஆற்றலை கொண்டு இருந்தாலும் அதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post 21ம் நூற்றாண்டை அழித்துவிடும் அபாயம் ஏஐ பயன்படுத்துவதில் உலக கட்டமைப்பு தேவை: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.