உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடு போயிருந்தது. இதில் கோயிலில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கோயில் நிர்வாக உறுப்பினர் ரமேஷ் புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post புழல் விநாயகபுரத்தில் கோயில் உண்டியல் பணம் திருட்டு appeared first on Dinakaran.