லக்‌ஷியா, கிடாம்பி அதிர்ச்சி தோல்வி

ஷென்ஸென்: சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திரங்கள் லக்‌ஷியா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர். சீனாவின் ஷி யுகியுடன் மோதிய லக்‌ஷியா சென் 19-21, 18-21 என்ற நேர் செட்களில் போராடி தோற்றார். உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சர்னுடன் (தாய்லாந்து) மோதிய கிடாம்பி 15-21 என முதல் செட்டை இழந்த நிலையில், 2வது செட்டில் அதிரடியாக விளையாடி 21-14 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய குன்லாவுட் 21-13 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நடப்பு சீசனில் கிடாம்பி தொடர்ந்து 3வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு தொடரில் அவர் காலிறுதி வரை முன்னேறியிருந்தார்.

The post லக்‌ஷியா, கிடாம்பி அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: