சிறார் எழுத்தாளர்கள் கிளை தொடக்கம்

 

சேந்தமங்கலம், நவ.7: புதுச்சத்திரம் ஒன்றியம், களங்காணியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட கிளை தொடக்க விழா மற்றும் குழந்தைகள் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. ஓய்வு தலைமையாசிரியர் பாலையா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் லதா வரவேற்று பேசினார். எழுத்தாளர் தீபிகா முன்னிலை வகித்தார். விழாவில், ஆதலின் பொம்மை என்ற நூலுக்காக பாலா சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதய சங்கருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எழுத்தாளர் சரிதாஜோ, சிறார் இலக்கியம் இன்று என்ற தலைப்பிலும், பேராசிரியர் மிளாதேவி கதைகள் சொல்லும் மாயாஜாலம் என்ற தலைப்பிலும் பேசினர். இதையடுத்து குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

The post சிறார் எழுத்தாளர்கள் கிளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: