திருவள்ளூரில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்; திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர், ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஐசிஎம்ஆர் அருகே கலைஞர் திடலில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் பாசறை கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மாலையில்வருகைதரும் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டந்தோறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்கள், மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாக முகவர்கள் இடையே சிறப்புரையாற்றி உற்சாகப்படுத்தி வருகின்றார். இதன்படி, திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஐ.சி.எம்.ஆர் கலைஞர் திடலில் வாக்குச்சாவடி முகவர்கள் பாசறை கூட்டம் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. இதில், ஒருங்கிணைந்த சென்னையில் 6 மாவட்டங்கள், காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மொத்தம் 11,569 பேர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொள்ள வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதையடுத்து இதில் கலந்துகொள்ள வருகைதரும் உதயநிதியை வரவேற்று திருவள்ளூர் நகர் முழுவதும் கட்சிக் கொடிகள், வாழைமர தோரங்கள் மற்றும் வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் திமுக கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

இதனிடையே இன்று காலை பாக முகவர்கள் கூட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் துவங்கியது. மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் வரவேற்று பேசினர். இதில் மாவட்ட செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, மாநில ஆதிதிராவிட நல அணி செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, க.கணபதி எம்எல்ஏ, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திமுக மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இதில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலாளர் வினோத் காந்தி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் டாக்டர் குமரன், உதயமலர் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.சிட்டிபாபு, வழக்கறிஞர் எஸ்.கே.ஆதாம், ஒன்றிய, நகர செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், சி.சு.ரவிச்சந்திரன், தா.கிறிஸ்டி, மோ.ரமேஷ், எஸ்.மகாலிங்கம், கே.அரிகிருஷ்ணன், சி.ஜெ.சீனிவாசன், வி.வினோத்குமார், பா.ஆர்த்தி ரவி, என்.கிருஷ்ணன், கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் மகாலட்சுமி மோதிலால், சரஸ்வதி ரமேஷ், சுஜாதா மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ம.கிரண், துணை அமைப்பாளர்கள் தா.மோதிலால், டி.எம்.சுகுமார், டி.கே.பாபு, மா.புவனேஷ்குமார், மிஸ்டர் தமிழ்நாடு டி.ஆர்.திலீபன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் வி.எஸ்.நேதாஜி, கே.ஏ.மதியழகன், வழக்கறிஞர் பி.கே.நாகராஜ், களம்பாக்கம் பன்னீர்செல்வம், சரஸ்வதி சந்திரசேகர், பூண்டி எம்.எஸ்.அருண், சி.சு.விஜயகுமார், ஜி.ஜெய்கிருஷ்ணா, நிர்வாகிகள் எஸ்.ஜெயபிரகாஷ், குத்தூஸ்ரகுமான், பி.ராஜா, எம்.கருணாநிதி, ஜி.மனோகரன், எம்.மணி, ராஜசேகர், எஸ்.டி.கோபிநாத், டி.டி.சதீஷ், சி.ஆன்ட்ருஸ், கிளைச் செயலாளர்கள் டி.விஜயகுமார், ஜி.கே.திலீப்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் காஞ்சிபாடி பி.சரவணன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி சரவணன், நல்லாட்டூர் கமலநாதன் உட்பட அனைத்து பாக முகவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

The post திருவள்ளூரில் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்; திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: