சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாக ஆடுவேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்து வரும் போட்டியில் இலங்கையுடன் இந்தியா ஆடி வருகிறது. இதனிடையே நேற்று ரோகித்சர்மா பேட்டி அளித்தபோது, அரையிறுதிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டதால் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இந்த நேரத்தில் அனைவரும் சிறந்த பார்மில் இருப்பதாக நான் நினைக்கிறேன். யாரும் ஓய்வெடுக்க விரும்பவில்லை. உடற்தகுதியும் நன்றாக இருக்கிறது. எனவே மாற்றம் இருக்காது, என்றார். மேலும் என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.

அதே சமயம் அணியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து விளையாடுகிறேன். அதிரடியாக பேட்டை சுழற்றி விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய மனநிலைமையாகும், என்றார். இலங்கை அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் கூறுகையில, ஆசிய கோப்பை பைனலில் அடைந்த தோல்வி நாங்கள் போராடுவதற்கு உத்வேகம் அளிக்கும். இந்தியா ஒரு நல்ல அணி, அது எங்களுக்குத் தெரியும், அவர்கள் இதுவரை சிறந்த கிரிக்கெட் ஆடி உள்ளனர். ஆனால் நாங்கள் எங்கள் திறமையை நிருபிக்க நல்ல வாய்ப்பாக இன்றைய போட்டியை பார்க்கிறோம், என்றார்.

The post சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடியாக ஆடுவேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: